close
Choose your channels

அவங்களா வலையில வந்து விழுறாங்க.. விசித்ரா கூறியது யாரை? பிக்பாஸ் வீட்டில் பரபரப்பு..!

Tuesday, November 14, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த ஒன்றரை மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் முதல் நாளிலிருந்து இந்த நிகழ்ச்சி விறுவிறுப்பாக வருகிறது. குறிப்பாக மாயா, பூர்ணிமா, ஜோவிகா என்ற கூட்டணி அமைந்த உடன் இந்த கூட்டணி அதிக ஆட்டம் போட்டு வருகிறது

குறிப்பாக பிரதீப் மீது பொய்யான குற்றச்சாட்டு கூறி அவரை வெளியேற்றியதில் வெற்றி பெற்றதை அடுத்து இந்த கூட்டணி அடங்காத கூட்டணியாக உள்ளது என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்த நிலையில் இன்றைய மூன்றாவது ப்ரமோ வீடியோவில் இந்த கூட்டணி குறித்தும், ஜோவிகா குறித்தும் விசித்ரா கூறும் காட்சி உள்ளது. அதில், ‘கேம்ன்னு நினைச்சு ஜோவிகா ஆடலை, அவங்களா வலையில வந்து விழுறாங்க. ஜோவிகாகிட்ட எதார்த்தமா தான் நான் படிப்பு பற்றி கூறினேன், ஆனால் அதை பெரிய பிரச்சனையாக்கியது ஜோவிகா தான் என்று கூறினார்.

அதற்கு தினேஷ், ‘அவங்க மட்டும் கேம் விளையாடுவாங்க, ஆனால் நாம விளையாட கூடாதுன்னு நினைக்கிறாங்க, அதெப்படி ஆடாம இருக்க முடியும்’ என்று கூற ‘மொத்தத்துல அவங்க ஒரு விஷமான உறவில் இருக்காங்க’ என்று விசித்ரா கூறுகிறார்.

பிரதீப் வெளியேற்றத்திற்கு பின்னரும் இந்த மாயா-பூர்ணிமா கூட்டணி தனது பாணியை மாற்றி கொள்ளவில்லை என்பதால் விரைவில் பிரதீப் பிரச்சனை போல் இன்னொரு பிரச்சினை எழ வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.