close
Choose your channels

மாணவர்களை சந்திக்கும் விழா.. ரசிகர்களுக்கு விஜய் போட்ட நிபந்தனை..!

Friday, June 16, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒவ்வொரு தொகுதிகளில் முதல் மூன்று இடத்தை பெற்ற மாணவ மாணவிகளை சந்திக்கிறார் என்றும் இந்த சந்திப்பின்போது அவர்களுக்கு சிறப்பு பரிசு வழங்க உள்ளார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த விழா நடத்துவது குறித்து ரசிகர்களுக்கு விஜய் ஒரு முக்கிய நிபந்தனை விதித்துள்ளதாக கூறப்படுகிறது.

விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நடைபெறும் இந்த விழா சென்னையில் நடைபெற இருப்பதாகவும் இந்த விழாவில் நாளை அதாவது ஜூன் 17ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இந்த விழாவில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ மாணவிகளுக்கு விஜய் தன் கையால் சான்றிதழ் வழங்க இருப்பதாகவும் இந்த விழாவில் மாணவ மாணவிகளையும் பெற்றோர்களும் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் இந்த விழாவிற்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சி குறித்து பொதுவெளியில் பேனர், கட் அவுட் ஆகிவற்றை வைக்கக்கூடாது என ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு விஜய் உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மாணவ மாணவிகளுக்கும் பெற்றோர்களுக்கும் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளதாகவும் அடையாள அட்டையை காண்பித்த பின்னர் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. மேலும் நிகழ்ச்சி முடிந்ததும் மாணவ மாணவியர் பெற்றோர்களுக்கு பிரியாணி வழங்கப்பட இருப்பதாகவும் விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் மற்றும் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.