close
Choose your channels

சிபிஐ நயன், 6 கொலைகள், விஜய்சேதுபதி: இமாலய எதிர்பார்ப்பில் இமைக்கா நொடிகள்

Monday, May 29, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் விரைவில் வெளிவரவுள்ள 'இமைக்கா நொடிகள்' படத்தின் தகவல்கள் ஒவ்வொன்றும் அந்த படத்தின் எதிர்பார்ப்பை பன்மடங்கு உயர்த்தி கொண்டே வருகின்றது.
ஏற்கனவே இந்த படத்தின் டீசர் சமீபத்தில் ரிலீஸ் ஆகி எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள நிலையில் தற்போது இந்த படம் குறித்த வேறு சில தகவல்களை இயக்குனர் அஜய்ஞானமுத்து கூறியுள்ளார்
இந்த படத்தில் நயன்தாரா சிபிஐ அதிகாரியாக நடித்துள்ளதாகவும், இந்த கேரக்டருக்கு நயனை தவிர வேறு யாரையும் நினைத்து கூட பார்க்க முடியாது என்றும் கூறிய இயக்குனர் அஜய்ஞானமுத்து, நயன்தாரா இந்த படத்தில் யாருக்கும் ஜோடியாக நடிக்காமல் சோலோவாக நடித்துள்ளதாக கூறினார்.
இந்த படத்தில் அடுத்தடுத்து ஆறு கொலைகள் நடப்பதாகவும், ஆறு கொலைகளும் நடக்கும் விதம் இதுவரை தமிழ் சினிமா பார்த்திராத வகையில் ஆறுவிதமாக இருக்கும் என்றும் கூறினார்.
மேலும் விஜய்சேதுபதி இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாகவும், அவருடைய கேரக்டர் படத்திற்கு மிக முக்கியமானது என்றும் அஜய்ஞானமுத்து கூறியுள்ளார்.
நயன்தாரா, அதர்வா, ராஷிகண்ணா, அனுராக் காஷ்யப், ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவும், புவன்ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பு பணியும் செய்துள்ள இந்த படத்தை கேமியோ பிலிம்ஸ் இந்தியா நிறுவனம் தயாரித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.