close
Choose your channels

பிரபல நடிகையுடன் நடிக்க மாட்டேன் என சொன்னது ஏன்? விஜய்சேதுபதி விளக்கம்..!

Saturday, September 23, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடிகையுடன் நடிக்க மாட்டேன் என விஜய் சேதுபதி கூறியதாக செய்திகள் வெளியான நிலையில் இது குறித்து விஜய் சேதுபதி விளக்கம் அளித்துள்ளார்

தமிழ் திரை உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதி தெலுங்கில் நடித்த திரைப்படம் ’உப்பென்னா’. இந்த படத்தில் விஜய் சேதுபதி மகளாக பிரபல தெலுங்கு நடிகை கீர்த்தி ஷெட்டி நடித்து இருந்த நிலையில் விஜய் சேதுபதி அடுத்ததாக தமிழ் திரைப்படம் ஒன்றில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமானார்.

இந்த நிலையில் அந்த படத்திற்கு நாயகியாக கீர்த்தி ஷெட்டியை நடிக்க வைக்க படக்குழுவினர் திட்டமிட்டனர். இதை அறிந்த விஜய் சேதுபதி ஏற்கனவே தெலுங்கில் அவருக்கு தந்தையாக நான் நடித்திருந்தேன். அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த நிலையில் தற்போது அவருடன் என்னால் ரொமான்ஸ் செய்து நடிக்க முடியாது. எனவே அவரை தவிர்த்து விட்டு வேறு நடிகையை ஒப்பந்தம் செய்யவும் என்று கூறியதாக தெரிவித்தார்

மேலும் ’உப்பென்னா’ படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது ஒரு காட்சியில் அவர் நடிக்க பயந்தார். அப்போது நான் அவரிடம் ’எனக்கு உன் வயதில் ஒரு மகன் இருக்கிறார், நீயும் என் மகள் போல தான், எனவே தைரியமாக நடி என்று கூறினேன். அதன் பிறகு அவர் நடித்தார்.. எனவே அவர் எனக்கு மகள் போன்றவர், என்பதால் அவருடன் ரொமான்ஸ் செய்து நடிக்க முடியாது’ என்று கூறியிருந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.