close
Choose your channels

ஒரு புரோஜனமும் இல்லை! 7 பேர் விடுதலை குறித்து விஜய்சேதுபதி கருத்து

Saturday, February 23, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ராஜீவ் காந்தி கொலையாளிக்ள் 7 பேர் விடுதலை குறித்து என்னிடம் கேள்வி கேட்டு ஒரு புரோஜனமும் இல்லை என நடிகர் விஜய்சேதுபதி கூறியுள்ளார்.

ராஜீவ் காந்தி கொலையாளிகள் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர்களை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசே முடிவெடுக்கலாம் என்று உச்சநீதிமன்றம் சில மாதங்களுக்கு முன் உத்தரவிட்டது. அதன்படி ஏழு பேர் விடுதலை செய்வது குறித்து தீர்மானம் இயற்றிய தமிழக அமைச்சரவை அந்த தீர்மானத்தை ஒப்புதலுக்காக கவர்னரிடம் அனுப்பி வைத்தது. ஆனால் கவர்னர் இன்னும் அந்த தீர்மானத்தில் கையெழுத்திடவில்லை.

இந்த நிலையில் 7 பேர் விடுதலை குறித்து நேற்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த நடிகர் விஜய்சேதுபதி, 'இந்த கேள்வியை என்னிடம் கேட்பதும் அதற்கு நான் பதில் சொல்வதிலும் எந்த புரோஜனும் இல்லை. யார் காலில் விழ வேண்டுமோ, அவர்கள் காலில் விழுந்து ஏதாவது நல்லது நடந்தால் சரி. இந்த விஷயத்தில் என்ன நடக்கின்றது என்பது எல்லோருக்கும் தெரியும்' என்று கூறினார்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.