close
Choose your channels

'சர்கார்' படப்பிடிப்பை முடித்தார் தளபதி விஜய்

Tuesday, August 28, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வந்த அரசியல் த்ரில் படமான 'சர்கார்' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்றது. இந்த நிலையில் இந்த படத்தில் விஜய் தனது பகுதியின் படப்பிடிப்பை முற்றிலும் முடித்துவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

ஏற்கனவே விஜய் தனது பகுதியின் டப்பிங் பணியை சமீபத்தில் முடித்துவிட்டதால், இந்த படத்தை பொருத்தவரையில் விஜய்யின் பணி முடிந்துவிட்டதாகவே கருதப்படுகிறது. எனவே விஜய் நடிப்பில் அட்லி இயக்கவுள்ள அடுத்த படத்தின் முக்கிய அறிவிப்பை இனி எந்த நேரத்திலும் எதிர்பார்க்கலாம்

வரும் தீபாவளி திருநாளில் வெளியாகவுள்ள 'சர்கார்' படத்தில் விஜய், கீர்த்திசுரேஷ், வரலட்சுமி, ராதாரவி, ப்ழ கருப்பையா, யோகிபாபு உள்பட பலர் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வரும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். இவருடைய இசையில் உருவான இந்த படத்தின் பாடல்கள் வரும் அக்டோபர் 2ஆம் தேதி வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.