close
Choose your channels

மீண்டும் ஒரு சரித்திர திரைப்படத்தில் விக்ரம்? நாயகி யார் தெரியுமா?

Monday, October 3, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் வெளியான ’பொன்னியின் செல்வன்’ என்ற சரித்திர திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் உலகம் முழுவதும் இந்த படம் மூன்றே நாட்களில் 200 கோடி ரூபாய் வசூல் செய்து உள்ளது என்பதும் தெரிந்ததே.

இந்த படத்தில் நடித்த அனைத்து நட்சத்திரங்களும் தங்கள் அதிகபட்ச உழைப்பை கொட்டி உள்ளார்கள் என்பதும் அதனால் தான் இந்த பற்றி சூப்பர் ஹிட் ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலன் கேரக்டரில் நடித்த விக்ரமுக்கு வாழ்த்துக்கள் குவிந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு சரித்திர திரைப்படத்தில் அவர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

பாலிவுட் திரையுலகில் உருவாக இருக்கும் பிரமாண்டமான திரைப்படம் ’சீதா’. ராமாயண காவியத்தில் வரும் சீதாவின் கதை அம்சத்தை கூறும் இந்த திரைப்படம் மிகவும் பிரமாண்டமாக தயாரிக்கப்பட உள்ளது என்பதும் சீதா கேரக்டரில் தேசிய விருது வென்ற கங்கனா ரனாவத் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தின் முக்கிய கேரக்டரில் நடிகர் விக்ரம் நடிக்க இருப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த படத்தின் இயக்குனர் அலாவுகிக் தேசாய் என்பவர் சமீபத்தில் விக்ரமை சந்தித்து இந்த படத்தின் கதையையும் அவரது கேரக்டரையும் கூறியிருப்பதாகவும் விக்ரம் இந்த படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. 

எனவே விக்ரம் இந்த படத்தில் நடிப்பது உறுதி செய்யப்பட்டாலும் எந்த கேரக்டரில் நடிக்க இருக்கிறார் என்பது குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த திரைப்படத்திற்கு பாகுபலி உள்பட பல திரைப்படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதிய விஜயேந்திர பிரசாத் திரைக்கதை வசனம் எழுத உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.