close
Choose your channels

சுந்தர். சி படப்பிடிப்பில் விஷாலுக்கு விபத்து

Thursday, March 28, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் 'மதகஜராஜா' மற்றும் 'ஆம்பள' படங்களுக்கு பின் மீண்டும் ஒரு படத்தில் விஷால் நடித்து வருகிறார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த படத்தின் படப்பிடிப்பு துருக்கியில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் ஒரு ஆக்சன் காட்சியை படமாக்கும்போது எதிர்பாராமல் ஏற்பட்ட விபத்தால் விஷால் காயம் அடைந்தார். விஷாலின் கையில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர் தற்போது சிகிச்சையில் இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் விஷாலின் கையில் கட்டு போடப்பட்டிருக்கும் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி அவரது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. விஷால் விரைவில் குணமாக அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்

இன்னும் டைட்டில் முடிவு செய்யப்படாத இந்த படத்தில் விஷால், தமன்னா, ஐஸ்வர்யா லட்சுமி உள்பட பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.