close
Choose your channels

ஏப்ரலில் சுந்தர் சியின் இரண்டு படங்கள் ரிலீஸ்

Wednesday, March 23, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சுந்தர் சி இயக்கிய 'அரண்மனை 2' என்ற பேய்ப்படம் சமீபத்தில் ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் வரும் ஏப்ரல் மாதம் அவர் தயாரித்த ஒரு படமும், அவர் இயக்கிய ஒரு படமும் என இரண்டு படங்கள் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


சுந்தர் சி தயாரிப்பில் உருவான திகில் படமான 'ஹலோ நான் பேய் பேசுகிறேன்' என்ற திரைப்படம் வரும் ஏப்ரல் 1ஆம் தேதி வெளியாகவுள்ளது. எஸ்.பாஸ்கர் இயக்கத்தில் உருவாகிய இந்த படத்தில் வைபவ், ஐஸ்வர்யா ராஜேஷ், ஓவியா, விடிவி கணேஷ், கருணாகரன், சிங்கம்புலி உள்பட பலர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி கடந்த சில ஆண்டுகளாக பெட்டிக்குள் முடங்கியிருந்த 'எம்ஜிஆர் என்றும் மதகஜராஜா' என்ற திரைப்படமும் ஏப்ரலில் ரிலீஸாகும் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது. விஷால், அஞ்சலி, வரலட்சுமி உள்பட பலர் நடித்துள்ள இந்த படம் பொருளாதார பிரச்சனை காரணமாக முடக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் விஷாலின் தீவிர முயற்சியால் தற்போது இந்த படம் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.