close
Choose your channels

விஜய்சேதுபதியின் அடுத்த படத்திற்கு இசையமைக்கும் இரட்டையர்கள்

Wednesday, January 30, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஒவ்வொரு ஆண்டும் அதிக படங்களில் நடித்து அதனை பெரும்பாலான வெற்றி படங்களாக கொடுத்து கொண்டிருக்கும் நடிகர் விஜய்சேதுபதிக்கு இந்த ஆண்டு பொற்காலமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு விஜய்சேதுபதி நடிப்பில் 'மாமனிதன், ''சூப்பர் டீலக்ஸ்', 'சிந்துபாத்', 'சயிர நரசிம்மரெட்டி', போன்ற படங்கள் வெளியாகி ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் விஜயா புரடொக்சன்ஸ் தயாரிப்பில் 'ஸ்கெட்ச்' பட இயக்குனர் விஜய்சந்தர் இயக்கத்தில் விஜய்சேதுபதி ஒரு படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது என்பதும் தெரிந்ததே. இந்த படத்தின் நாயகியாக ராஷிகண்ணா நடிக்கவுள்ளதாக வெளிவந்த அதிகாரபூர்வ செய்தியை நேற்று பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளர் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்த படத்திற்கு இளம் இரட்டையர்களான விவேக்சிவா-மெர்வின் சாலமன் இசையமைக்கவுள்ளனர். இந்த தகவலை விஜயா புரடொக்சன்ஸ் நிறுவனம் தனது சமூக வலைத்தள பக்கத்தில் உறுதி செய்துள்ளது. விவேக்-மெர்வின் என்ற இந்த இரட்டையர்கள் ஏற்கனவே 'வடகறி', 'புகழ்', 'குலேபகாவலி', 'மோகினி' போன்ற படங்களுக்கு இசையமைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.