close
Choose your channels

பிரியங்காவிடம் அக்சரா கூறியது என்ன? அதிர்ச்சி வீடியோ!

Thursday, December 16, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த சில நாட்களாக அமைதியாக இருந்த போட்டியாளர்கள் கூட ஆவேசமாக மாறி வருவதை பார்த்து வருகிறோம். குறிப்பாக எந்நேரமும் புன்னகையுடன் பிக்பாஸ் வீட்டில் வலம் வந்து கொண்டிருந்த அக்சரா நேற்று திடீரென ஆவேசம் ஆனார் என்பதும் ராஜு மற்றும் பிரியங்காவுடன் மோதலில் ஈடுபட்டார் என்பதையும் பார்த்தோம்

இந்த நிலையில் அக்சராவின் ஆவேசம் இன்றும் தொடர்கிறது. இன்றைய முதல் புரமோவில் பிரியங்கா குறித்து வருணிடம் அக்சரா ஆவேசமாக பேசி வருகிறார். ஆனால் ப்ரியங்காவோ மிகவும் கூலாக தமிழில் பேசுன்னு சொன்னேன் அவ்வளவு தான் என்று கூறுகிறார்.

மேலும் ஒரு தடவை இரண்டு தடவை என்றால் பரவாயில்லை, இப்படி சும்மா எல்லாவற்றையும் கண்டபடி பேசினால் என்னால் சுயமரியாதையை விட்டுக் கொடுக்க முடியாது என்று அவ்வாறு சுயமரியாதையை விட்டுக்கொடுக்க வேண்டும் என்ற அவசியம் எனக்கு இல்லை என்றும் பிரியங்கா கூறுகிறார்

அதேபோல் வருணிடம் அக்சரா கூறியபோது, ‘இவளுக்கு மட்டும் தான் செல்ப் ரெஸ்பெக்ட் இருக்கின்றதா? வேற யாருக்குமே இல்லையா? எல்லாரும் ஒரு லூசு மாதிரி ரோட்டில் சுத்திக்கிட்டு இருந்து இங்கு வந்து இருக்கோமா? என்று கேட்கிறார்.

இந்த நிலையில் அக்சரா, அப்படி என்ன பிரியங்காவிடம் கூறினார் என்பது குறித்த வீடியோ வைரலாகி வருகிறது. அதில் அக்சரா, ‘தமிழ்ல்ல பேசு மயிருல பேசுன்னு சொல்றா’ என்று கூறியுள்ளதை அடுத்து அக்சராவுக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.