close
Choose your channels

பிக்பாஸ் 2 டைட்டில் வின்னர் யார்? தற்போதைய வாக்கு நிலவரம்

Monday, September 24, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் 2 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்திற்கு வந்துவிட்டது. இந்த வாரம் வெள்ளியன்று பிக்பாஸ் டைட்டில் வின்னர் யார்? என்பது அறிவிக்கப்படவுள்ளது.

இந்த நிலையில் நேற்று யாஷிகா வெளியேறியவுடன் பிக்பாஸ் டைட்டில் வின்னர் யார் என்பதை முடிவு செய்யும் வாக்குகள் பதிவாக தொடங்கிவிட்டது. பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்தி வரும் சேனல், அவ்வப்போது இறுதி போட்டியில் உள்ள போட்டியாளர்களுக்கு கிடைத்த வாக்குகளின் எண்ணிக்கையை காண்பித்து வருகிறது.

அந்த வகையில் இதுவரை பதிவான வாக்குகளின்படி ரித்விகாவிற்கு 10 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளது. இரண்டாம் இடத்தில் உள்ள ஐஸ்வர்யாவுக்கு 5 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் கிடைத்துள்ளது. மூன்றாம் இடத்தில் விஜயலட்சுமியும், கடைசி இடத்தில் ஜனனியும் உள்ளனர்.

இந்த நிலையில் உண்மையான போட்டி ரித்விகாவும் ஐஸ்வர்யாவுக்கும் இடையேதான் நடப்பது போல் தெரிகிறது. ஐஸ்வர்யாவைவிட இரண்டு மடங்கு வாக்குகள் ரித்விகாவிற்கு கிடைத்துள்ளதால் அவர் டைட்டில் வின்னராக அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.