close
Choose your channels

நதிகளை மீட்க நடிகை ராதிகாவின் வேண்டுகோள்

Friday, August 11, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

குளம், குட்டை, கண்மாய், ஏரிகள் போன்ற நீர் ஆதாரங்கள் அனைத்தும் கட்டிடங்களாக மாறிவிட்ட நிலையில் தற்போது இருக்கும் ஒரே நீர் ஆதாரம் நதி ஒன்றே. ஆனால் அந்த நதியிலும் மணல்களை கொள்ளையடித்தும், ஆக்கிரமிப்புகள் செய்தும் அழிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நதிகளை மீட்க சமூக ஆர்வலர்கள் பல்வேறு முயற்சிகள் செய்து வரும் நிலையில் Rally for Rivers என்ற அமைப்பு நாடு தழுவிய பேரணி நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த பேரணி வரும் செப்டம்பர் 3ஆம் தேதி கோவையில் தொடங்கி அக்டோபர் 2ஆம் தேதி புதுடெல்லியில் முடிகிறது. இந்த பேரணியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் 80009 80009 என்ற எண்ணுக்கு மிஸ்ட் கொடுத்தால் போதும்.

இதுகுறித்து நடிகை ராதிகா வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில் கூறியதாவது: வாட்ஸ் அப், ஃபேஸ்புக் போன்றவற்றுக்கு அதிக நேரம் செலவு செய்கிறோம். நம்மை காப்பாற்றும் இயற்கைக்காக இந்த நம்பர் அதாவது 80009 80009 என்ற எண்ணுக்கு ஒரு மிஸ்ட் கால் கொடுங்கள். நதிகளை மீட்போம், பாரதத்தை காப்போம்' என்று கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.