close
Choose your channels

'96' படத்தின் பாதிப்பு: 40 ஆண்டுகளுக்கு பின் சந்தித்த நண்பர்கள்

Sunday, December 30, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய்சேதுபதி, த்ரிஷா நடித்த '96' திரைப்படத்தின் உள்ள பல காட்சிகள் கிட்டத்தட்ட நம் அனைவரின் வாழ்விலும் நடந்திருக்கும். பசுமரத்தாணிபோல் பதிந்த பள்ளிப்பருவ காலம் மீண்டும் வராதா? என்ற ஏக்கம் அனைவரின் மனதிலும் இந்த படத்தை பார்த்தவுடன் எழுந்ததால் தான் இந்த படம் சூப்பர் ஹிட் ஆகியது.

இந்த படத்தில் 20 ஆண்டுகளுக்கு பின் சந்திக்கும் விஜய்சேதுபதி, த்ரிஷாவின் சந்திப்பு அதன் பின் நடைபெறும் நெகிழ்ச்சியான சம்பவங்கள்தான் இந்த படத்தின் கதை. இந்த நிலையில் இந்த படத்தில் வரும் இதே காட்சிபோல் ஒரு உண்மையான சம்பவம் தற்போது நடந்துள்ளது. கோவையில் தனியார் கல்லூரி ஒன்றில் எம்பிஏ படித்த மாணவர்கள் தங்கள் குடும்பத்தினர்களுடன் 40 ஆண்டுகள் கழித்து சந்தித்த நெகிழ்ச்சியான சம்பவம் குறித்த செய்தி வெளிவந்துள்ளது.

கடந்த 1978ஆம் ஆண்டு கோவையில் உள்ள கல்லூரி ஒன்றில் எம்பிஏ படித்த மாணவர்கள் 40 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் சந்தித்தனர். தங்கள் படித்தபோது நிகழ்ந்த அனுபவங்கள் படிப்புக்கு பின் அவர்களுடைய வாழ்க்கையில் நடந்த மாற்றங்கள் குறித்து ஒருவருடன் ஒருவர் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டனர். அதுமட்டுமின்றி தங்களை நல்ல நிலைக்கு கொண்டு வர உதவிய இந்த கல்லூரிக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வாகவும் இந்த விழா நடைபெற்றது. தற்போது ஐஏஎஸ் உள்ளிட்ட பெரிய பொறுப்பில் இருக்கும் இந்த முன்னாள் மாணவர்கள் தற்போதைய மாணவர்களின் முன்னேற்றம் குறித்தும், அவர்களுக்காக தாங்கள் செய்ய வேண்டிய கடமை குறித்தும் திட்டமிட்டுள்ளனர். ஒரு திரைப்படம் சமுதாயத்தில் ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றால் இதைவிட அந்த படத்திற்கு கிடைக்கும் பெருமை வேறு எதுவும் இல்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.