close
Choose your channels

'வீரமே வாகை சூடும்' நடிகை மீது போலீஸ் புகார்.. ஐபிஎஸ் அதிகாரியுடன் மோதலா?

Tuesday, May 23, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஐபிஎஸ் அதிகாரியின் வாகனத்தை சேதப்படுத்தியதாக ’வீரமே வாகை சூடும்’ என்ற படத்தில் நடித்த நடிகை மீது போலீஸ் புகார் கொடுக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

விஷால் நடித்த ’வீரமே வாகை சூடு’ பிரபுதேவா நடித்த ’தேவி 2’ உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்தவர் நடிகை டிம்பிள் ஹயாதி. இவர் ஹைதராபாத்தில் உள்ள ஜூப்ளி ஹில்ஸ் என்ற பகுதியில் அப்பார்ட்மெண்ட் ஒன்றில் தனது ஆண் நண்பருடன் வாழ்ந்து வருகிறார். அதே அபார்ட்மெண்டில் ஐபிஎஸ் அதிகாரி ராகுல் ஹெக்டே என்பவர் வசித்து வருவதாகவும் காவல் துறையில் டிராபிக் பிரிவில் உதவி கமிஷனராக அவர் பணிபுரிந்து வருவதாகவும் தெரிகிறது.

இந்த நிலையில் ஐபிஎஸ் அதிகாரி ராகுல் ஹெக்டே தனக்குரிய இடத்தில் தனது வாகனத்தை பார்க்கிங் செய்யும்போது எல்லாம் நடிகை டிம்பிள் பிரச்சனை செய்வதாகவும், ஐபிஎஸ் அதிகாரியின் வாகனத்தை டிம்பிள் எட்டி உதைத்து விட்டு செல்வதாகவும் கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி சமீபத்தில் டிம்பிள் தனது காரை எடுக்கும்போது ஐபிஎஸ் அதிகாரியின் காரை சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனை அடுத்து ஐபிஎஸ் அதிகாரியின் டிரைவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசு வாகனத்தை வேண்டுமென்றே இடித்ததாகவும் தன்னை தகாத வார்த்தைகளில் பேசியதாகவும் டிரைவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் டிம்பிள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி டிம்பிள் ஹயாதி தனது தரப்பு விளக்கத்தை அளித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து டிம்பிள் தனது சமூக வலைதளத்தில் ’அதிகாரத்தை பயன்படுத்துவது எந்த தவறையும் திருத்துவது ஆகாது’ என்றும் கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.