close
Choose your channels

பிக்பாஸ் போட்டியாளருக்கு ரெட் கார்டு வழங்கப்படுகிறதா? கமல்ஹாசன் அதிரடி..!

Saturday, November 4, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த நிகழ்ச்சியில் கடந்த வாரம் ஐந்து போட்டியாளர்கள் வைல்டு கார்டு என்ட்ரியாக வந்த பின்னர் விறுவிறுப்பு அதிகரித்து உள்ளது என்பதையும் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் ஆரம்பம் முதல் அதிரடியாக விளையாடி வரும் போட்டியாளர்களில் ஒருவர் பிரதீப் ஆண்டனி. இவர் சக போட்டியாளர்கள் அனைவரிடமும் சண்டை போட்டுவிட்டார் என்பதும் தனது போக்கை அவர் மாற்றிக் கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று கமல்ஹாசன் முன்னிலையில் பிரதீப் ஆண்டனி குறித்து சரமாரியாக புகார்கள் வழங்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக ’கெட்ட வார்த்தைகள் தவறான நோக்கத்தில் யூஸ் பண்ணுகிறார்’ என ஜோவிகா கூறுகிறார்

இதனை அடுத்து பூர்ணிமா ’இவரால் சில பேருக்கு நைட் தூங்குவதற்கு பயமாக இருக்கிறது’ என்று கூறுகிறார். ‘நான் பேசுவது தப்பெல்லாம் கிடையாது, நான் இப்படித்தான் பேசுவேன்’ என்று நிக்சன் கூறுகிறார்

விஷ்ணு கூறியபோது ’என்கிட்ட யாராவது வச்சுக்கிட்டீங்கன்னா, அசிங்க அசிங்கமாக திட்டி விடுவேன் என்று கூறியதாக குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். மேலும் ‘டோர் மூடாமல் டாய்லெட் போகிறார் என்று மணி சந்திரா கூறினார். ’என்னுடைய அருணாகயிறு பற்றி கமெண்ட் அடிக்கிறார்’ என்று ரவீனா கூறுகிறார்.

இதனை அடுத்து கமல்ஹாசன் ’இதுக்கு என்ன தீர்ப்பு வழங்க வேண்டும் என்பது எனக்கு தெரியும்’ என்று கூறுகிறார். இதனை அடுத்து பிரதீப்புக்கு ரெட் கார்டு வழங்கப்பட உள்ளதாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.