close
Choose your channels

இன்று மாலை வெளியாகிறது சிம்பு படத்தின் புதிய பாடல்

Thursday, May 5, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com
கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் 'அச்சம் என்பது மடமையடா' படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. இன்னும் ஒரே ஒரு பாடலின் படப்பிடிப்பு மட்டுமே பெண்டிங் உள்ள நிலையில் இந்த படத்தின் பாடல் வெளியீட்டு தேதி மற்றும் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த படத்தில் இடம்பெற்ற 'தள்ளிப்போகாதே' என்ற சிங்கிள் பாடல் ரிலீஸ் ஆகி சிம்பு, மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் ரசிகர்களால் பெரும் வரவேற்புக்கு உள்ளானது. இதனையடுத்து இன்று மாலை 6 மணிக்கு 'ஷோக்காலி' என்று தொடங்கும் பாடலை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் விக்னேஷ் சிவன் எழுதிய இந்த பாடலை ஆதித்யா ராவ் பாடியுள்ளார். இந்த பாடலில் இடம்பெற்றுள்ள ராப் பகுதியை ADK மற்றும் ஸ்ரீராஸ்கால் ஆகியோர் எழுதி பாடியுள்ளனர்.
சிம்பு, மஞ்சிமா மோகன், டேனியல் பாலாஜி மற்றும் சிறப்பு வேடத்தில் ராணா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை கவுதம் மேனன் தயாரித்து இயக்கியுள்ளார். 'என்னை அறிந்தால்' ஒளிப்பதிவாளர் டான் மேக்ரதார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்தை அந்தோணி படத்தொகுப்பு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.