close
Choose your channels

நடிகர் அப்பாஸ்-க்கு என்ன ஆச்சு? மருத்துவமனையில் இருக்கும் அதிர்ச்சி புகைப்படம்!

Sunday, November 20, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகில் கடந்த 90களின் சாக்லேட்பாய் நடிகராக இருந்தவர் அப்பாஸ். இவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவது போன்ற புகைப்படம் வைரலாகி வரும் நிலையில் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த 1996ம் ஆண்டு வெளியான ’காதல் தேசம்’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் நடிகர் அப்பாஸ். அதன்பின் அவர் ’விஐபி’ உள்பட பல திரைப்படங்களில் நடித்தார் என்பதும் அவரது சாக்லேட் பாய் நடிப்பு இளம்பெண்களை கவர்ந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் ’படையப்பா’ உள்பட பல படங்களில் நடித்த அவர் கடந்த சில ஆண்டுகளாக திரைப் படங்களில் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகர் அப்பாஸ் தனது சமூக வலைத்தளத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ள நிலையில் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தனக்கு சர்ஜரி செய்யப்பட்டுள்ளதாகவும் தனது உடல்நிலை தற்போது சீராக தேறி வருவதாகவும் தனக்காக பிரார்த்தனை செய்த, வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி என்றும் அப்பாஸ் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். இதனை அடுத்து அவர் விரைவில் குணமாக ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஏற்கனவே அப்பாஸ்-க்கு கடந்த ஆகஸ்ட் மாதம் காலில் காயம் ஏற்பட்ட நிலையில் அதற்கு சிகிச்சை எடுத்துக் கொண்டு இருந்தார். இந்த நிலையில் தற்போது அவரது காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.