close
Choose your channels

போதைப்பொருள் விழிப்புணர்வு குறித்து தமிழ் நடிகரின் பேச்சு.. தேம்பி தேம்பி அழுத பெண் காவலர்

Saturday, August 12, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

போதைப்பொருள் விழிப்புணர்வு குறித்து தமிழ் நடிகர் ஒருவர் பேசியதை கேட்டு பாதுகாப்புக்கு வந்திருந்த பெண் காவலர் தேம்பி தேம்பி அழுத சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.

சென்னையில் சமீபத்தில் நடைபெற்ற போதைப் பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நடிகர் தாமு பேசினார். போதைப்பொருள் ஒழிய வேண்டும் என்றும் பாதைகள் ஒளிர வேண்டும் என்றும் நடிகர் தாமு பள்ளி மாணவர் மாணவர்களிடம் போதைப் பொருளால் ஏற்படும் தீமைகள் குறித்து உணர்ச்சி வசமாக பேசினார்.

மேலும் போதைப்பொருள் பழக்கத்தின் பழக்கம் ஏற்பட்டு விட்டால் அதை தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் அவர் மிமிக்ரி மூலம் அனைவருக்கும் எளிதில் புரியும் வகையில் விளக்கமாக எடுத்துரைத்தார்.

அவருடைய உணர்ச்சிகரமான பேச்சைக் கேட்டு பள்ளி மாணவ மாணவியர் மற்றும் பெற்றோர்கள் கண் கலங்கினர். இதனை அடுத்து இந்த நிகழ்ச்சியின் பாதுகாப்புக்கு வந்திருந்த பெண் காவலர் ஒருவர் தாமுவின் பேச்சை கேட்டு தேம்பி தேம்பி அழுதார். இது குறித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.