close
Choose your channels

உங்களுடைய வெறித்தனமான பக்தன் நான்: பிக்பாஸ் வீட்டில் ஜெயம் ரவி!

Sunday, December 27, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் வீட்டிற்கு ஜெயம் ரவி விசிட் செய்யப் போகிறார் என்பதும் தனது ’பூமி’ படத்தின் புரமோஷன் காரணமாக அவர் பிக்பாஸ் வீட்டிற்கு செல்ல உள்ளார் என்பதையும் நேற்று ஏற்கனவே நாம் பார்த்தோம்

இந்த நிலையில் இன்றைய முதல் புரோமோவில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜெயம் ரவியை பேசும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. முதலில் கமல்ஹாசனை சந்தித்துவிட்டு அதன்பின்னர் அகம்டிவி மூலம் போட்டியாளர்களை சந்தித்துப் பேசும் ஜெயம் ரவி, ‘இந்த வின்னிங் டைம் வந்துவிட்டது என்று நினைக்கிறேன். இறுதி போட்டி நெருங்கிவிட்டது. அனைவரும் சூப்பராக விளையாடுகிறீர்கள், பயங்கரமாக இருக்கிறது, செம எண்டர்டெயினிங் ஆக இருக்கின்றது

உங்களுடைய உண்மையான திறமையை நீங்கள் எப்போதும் போல் காட்டினாலே போதும், உங்களை அங்கிருந்து தெரியுமா என்பது தெரியவில்லை. ஆனால் நாங்கள் வெளியில் இருந்து வேற மாதிரி உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். சின்சியராக விளையாடுகிறீர்கள் என்பது எங்களுக்கு தெரிகிறது’ என்று கூறினார்

அப்போது கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியை ரெகுலரா பார்க்கிறீர்களா? என்று கேட்டபோது ’சார் நீங்கள் எது செய்தாலும் நான் பார்ப்பேன், ஏனெனில் நான் உங்களுடனே வெறித்தனமான பக்தன்’ என்று கூறுவதுடன் இன்றைய முதல் புரோமோ முடிவடைகிறது. கமல்ஹாசனுடன் பேசிக்கொண்டிருக்கும் ஜெயம்ரவி, பிக்பாஸ் வீட்டிற்கும் சென்று போட்டியாளர்களை நேரிலும் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.