close
Choose your channels

நீண்ட இடைவெளிக்கு பின் ரீஎண்ட்ரி ஆகும் மைக்மோகன்!

Monday, December 27, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகில் கடந்த 80களில் பல சூப்பர் ஹிட் சில்வர் ஜூப்ளி படங்களை கொடுத்த நடிகர் மைக் மோகன் நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் திரையுலகில் ரீ-என்ட்ரி ஆக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 1980ஆம் ஆண்டு ’மூடுபனி’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் மோகன் அதன்பின்னர் ’நெஞ்சத்தை கிள்ளாதே’ ’கிளிஞ்சல்கள்’ ’பயணங்கள் முடிவதில்லை’ ’கோபுரங்கள் சாய்வதில்லை’ ’விதி’ உள்பட பல வெற்றிப் படங்களில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக திரையுலகில் இருந்து விலகியிருந்த நடிகர் மோகன் தற்போது மீண்டும் தமிழ் திரையுலகில் ரீ என்ட்ரி ஆக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தை இயக்குனர் விஜய்ஸ்ரீ இயக்கவுள்ளார். இவர் ஏற்கனவே ’தாதா 87’ ’பவுடர்’ உள்பட ஒருசில படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்த படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்கும் என்றும் இந்த படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.