close
Choose your channels

படப்பிடிப்பின்போது அமலாபால் காயம்: படப்பிடிப்பு ரத்து

Tuesday, August 14, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நயன்தாரா, த்ரிஷா போன்று நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டரில் நடிகை அமலாபால் 'அதோ அந்த பறவை போல' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அமலாபாலுக்கு ஆக்சன் காட்சிகளும் உண்டு.

ஆக்சன் காட்சிகளுக்காக பிரத்யேகமாக பயிற்சி பெற்ற நடிகை அமலாபால், ஒருசில காட்சிகளில் டூப் இன்று சண்டை காட்சிகளில் நடித்தார். அப்படி ஒரு ஆக்சன் காட்சியில் அமலாபால் நடித்து கொண்டிருந்தபோது அமலாபாலின் கையில் காயம் ஏற்பட்டது

கையில் உள்ள காயத்தையும் பொருட்படுத்தாமல் படப்பிடிப்பை முடித்துவிட்டு அமலாபாலா சிகிச்சை பெற்றார். அப்போதுதான் அவருடைய கையில் தசைநார் கிழிந்துள்ளதாகவும், ஒருசில நாட்கள் அவர் முழு ஓய்வில் இருக்கவேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனையடுத்து படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு தற்போது அமலாபால் முழு ஓய்வு எடுத்து வருகிறார்.

இருப்பினும் விரைவில் குணமாகி படப்பிடிப்பு வந்துவிடுவேன் என்றும், தொடர்ந்து ஆக்சன் காட்சிகளில் டூப் இன்றி நடிப்பேன் என்றும் அவர் படக்குழுவினர்களிடம் தைரியமாக கூறியுள்ளார்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.