close
Choose your channels

இந்த தேதிய டைரில குறிச்சு வச்சுக்கோங்க, உலகத்தில எங்க இருந்தாலும் வந்துருங்க: குஷ்பு

Friday, September 16, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

செப்டம்பர் 24ஆம் தேதியை உங்கள் டைரியில் குறித்து வைத்துக் கொள்ளுங்கள் என்றும் உலகத்தில் எந்த மூலையில் இருந்தாலும் நீங்கள் திருச்சிக்கு வந்து விடுங்கள் என்றும் நடிகை குஷ்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

தற்போது தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்கள் அனைவருமே இசை நிகழ்ச்சியை உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் நடத்தி வருகிறார்கள் என்பது தெரிந்ததே. சமீபகாலங்களில் இசைப்புயல் ஏஆர் ரகுமான், இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா ஆகியோர்களின் இசைநிகழ்ச்சி நடந்தது என்பதை அறிந்தோம்.

இந்த நிலையில் அடுத்த கட்டமாக கார்த்திக் ராஜா திருச்சியில் வரும் 24ஆம் தேதி இசை நிகழ்ச்சி ஒன்றை பிரமாண்டமாக நடத்த உள்ளார். செப்டம்பர் 24ஆம் தேதி திருச்சியில் இந்த இசை கச்சேரி நடைபெற இருப்பதாகவும் இதில் முன்னணி பாடகர்கள் பாட இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த தகவலை தான் நடிகை குஷ்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தன்னுடைய மனதுக்கு மிகவும் நெருக்கமான இடம் திருச்சி என்றும் தானும் திருச்சியில் நடைபெறும் இந்த இசைநிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் உலகத்தில் எந்த மூலையில் இருந்தாலும் இந்த தேதியை நீங்கள் உங்கள் டைரியில் குறித்து வைத்துக்கொண்டு தவறாமல் வந்து இந்த இசை நிகழ்ச்சியை பாருங்கள் என்று தெரிவித்துள்ளார்.

இந்த இசை நிகழ்ச்சியில் சாதனா சர்கம், ஹரிஹரன், குக் வித் கோமாளி பிரபலம் ஷிவாங்கி உள்ளிட்ட பலர் கலந்து கொள்ள இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.