close
Choose your channels

மீண்டும் திரைப்படத்தில் ரீஎண்ட்ரி ஆகும் மீனா.. அவரே வெளியிட்ட அறிவிப்பு..!

Tuesday, September 5, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை மீனாவின் கணவர் கடந்த ஆண்டு காலமான நிலையில் அவர் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப பல மாதங்கள் ஆகும் என்று கூறப்பட்டது. ஆனால் அவரது நெருங்கிய தோழிகள் மற்றும் உறவினர்கள் அவரை மிக குறுகிய காலத்தில் துக்கத்தில் இருந்து வெளியே கொண்டு வந்து விட்டனர்.

இந்த நிலையில் தற்போது மீண்டும் திரைப்படங்களில் நடிக்க இருப்பதாக நடிகை மீனா தெரிவித்துள்ளார். நடிகை மீனா தனது சமூக வலைதள பக்கத்தில் நீல் புரொடக்ஷன் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் படத்தில் நடிக்க இருப்பதாக அறிவித்துள்ளார். ஜெய ஜோஸ் ராஜ் என்ற மலையாள இயக்குனரின் இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்தில் தான் அவர் நடிக்க உள்ளார்.

மீண்டும் கேமரா முன் நிற்பது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது என்றும் மற்றொரு மறக்க முடியாத கேரக்டரில் நடிக்க தயாராக இருக்கிறேன் என்றும் என்னால் உற்சாகமாக இல்லாமல் இருக்க முடியாது என்றும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மீனா தெரிவித்துள்ளார்.

மலையாள இயக்குனர் ஜெய ஜோஸ் ராஜ் இயக்கத்தில் நடிப்பதால் மீனா நடிக்கும் இந்த படம் மலையாள திரைப்படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.