close
Choose your channels

நடிகை நவ்யா நாயருக்கு இவ்வளவு பெரிய மகனா? வைரலாகும் குடும்ப புகைப்படங்கள்..!

Saturday, September 23, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை நவ்யா நாயர் தனது கணவர், மகன் மற்றும் மாமியாருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் நவ்யா நாயருக்கு இவ்வளவு பெரிய மகனா? என்று ரசிகர்கள் ஆச்சரியத்துடன் கமெண்ட் பகுதியில் பதிவு செய்து வருகின்றனர்.

மலையாளத்தில் பல திரைப்படங்களில் நடிகை நவ்யா நாயர் நடித்துக் கொண்டிருந்த நிலையில் கடந்த 2004 ஆம் ஆண்டு ராதா மோகன் இயக்கத்தில் உருவான ’அழகிய தீயே’ என்ற திரைப்படத்தில் தமிழில் அறிமுகமானார். இந்த படத்தின் நாயகனாக பிரசன்னா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதனை அடுத்து தமிழில் ’சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி’ ’பாசக்கிளிகள்’ ’அமிர்தம்’ ’மாய கண்ணாடி’ 'சில நேரங்களில்’ ’ராமன் தேடிய சீதை’ உள்பட ஒரு சில படங்களில் நடித்தார்.

இந்த நிலையில் கடந்த 2010 ஆம் ஆண்டு மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் சந்தோஷ் மேனன் என்பவரை அவர் திருமணம் செய்து கொண்டார். அதே ஆண்டில் அவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது.

இந்த நிலையில் சுங்கத்துறை அதிகாரி ஒருவர் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை செய்தபோது அவர் நவ்யா நாயருக்கு பல பரிசு பொருட்கள் கொடுத்ததும் இருவருக்கும் இடையே நட்பு இருந்தது தெரிய வந்ததாக செய்திகள் வெளியானது. இதனால் நவ்யா தனது கணவரை விவாகரத்து செய்யப் போவதாக மலையாள திரையுலகில் வதந்திகள் பரவியது.

இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நவ்யா நாயர் தனது கணவர், மகன், மற்றும் மாமியாருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நவ்யாவுக்கு இவ்வளவு பெரிய மகனா? விரைவில் அவர் ஹீரோவாகி விடுவார் என்று வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.