close
Choose your channels

இணையத்தில் பரவிய வதந்திக்கு விளக்கமளித்த நடிகை ரேகா

Monday, February 12, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பாரதிராஜா இயக்கிய 'கடலோர கவிதைகள்' படத்தில் அறிமுகமான நடிகை ரேகா, அதன்  பின்னர் என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு, புரியாத புதிர், புன்னகை மன்னன் உள்பட பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். தற்போது 'கேணி' என்ற படத்திலும் அவர் நடித்து வருகிறார்

இந்த நிலையில் நடிகை ரேகாவின் மகள் சினிமாவில் நடிக்கவிருப்பதாக ஒருசில இணையதளங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் வதந்தி ஒன்று பரவி வருகிறது. இந்த வதந்திக்கு நடிகை ரேகா விளக்கமளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

மதிப்பிற்குரிய ஊடக நண்பர்களுக்கு, என் மகள் சினிமாவில் நடிக்கவிருப்பதாக சமூக வலைதளங்களிலும், சில இணையதள பக்கங்களிலும் தவறான செய்திகள் பரப்பப்படுவதாக அறிகிறேன். அந்த செய்தியில் எள்ளளவும் உண்மையில்லை எனத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், என் மகள் உயர்கல்வி படிப்பதற்காக ஆயத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார் என்பதையும், சினிமாவில் நடிப்பதற்கான ஆர்வமோ, ஆசையோ அவருக்குத் துளியும் இல்லை என்பதனையும் இதன்மூலம் தெரிவித்துக் கொள்கிறேன். இது சம்பந்தமாக தவறான தகவல்களை பரப்பி வருவோர் இனியும் தொடராமல் நிறுத்திக் கொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.  நன்றி.

இவ்வாறு நடிகை ரேகா தனது மகள் குறித்த வதந்திக்கு விளக்கமளித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.