close
Choose your channels

வெள்ள பாதிப்பு பகுதியில் சமந்தா அம்மா நிவாரண உதவி

Monday, December 28, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னையில் கனமழை மற்றும் வெள்ளத்தால் தத்தளித்த பொதுமக்களுக்கு கோலிவுட் திரையுலகினர் லட்சக்கணக்கில் நிதியுதவி செய்தது மட்டுமின்றி நிவாரண பொருட்களை பாதிக்கபப்ட்ட மக்களுக்கு நேரடியாக சென்று கொடுத்து உதவியும் செய்தனர். இந்த வகையில் வெள்ள நிவாரணத்திற்காக ரூ.30 லட்சம் அள்ளித்தந்த நடிகை சமந்தா, தற்போது பொதுமக்களுக்கு நேரடியாக நிவாரண உதவி செய்யும் பணியையும் செய்துள்ளார்.


சென்னை அருகேயுள்ள பல்லாவரம் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு சமந்தாவின் சார்பில் அவருடைய அம்மா நேரடியாக நிவாரண உதவியை வழங்கினார். அவர் வழங்கிய பையில் அத்தியாவசிய பொருட்களான குக்கர், மண்ணென்ணெய் ஸ்டவ், 5 கிலோ அரிசி, புடவை, வேட்டி, 2 தட்டுகள், 2 தம்ளர்கள், பாத்திரங்கள், பெட்ஷீட், துண்டு, சமையல் எண்ணெய், உப்பு, பருப்பு, சாம்பார் பவுடர், மஞ்சள், மிளகாய், மல்லிப்பொடி ஆகியவை இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சமந்தா அம்மா கொடுத்த இந்த நிவாரண பொருட்களின் மதிப்பு ஒருசில லட்சங்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது. நிவாரண பொருட்களை வாங்கி சென்ற மக்கள் சமந்தா மற்றும் அவருடைய தாயாருக்கு நன்றி தெரிவித்து கொண்டு மகிழ்ச்சியுடன் சென்றதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.