close
Choose your channels

நடிகை சரண்யா மோகனுக்கு இவ்வளவு பெரிய மகன், மகளா?

Wednesday, December 15, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரை உலகின் நடிகைகளில் ஒருவரான சரண்யா மோகன் தனது சமூக வலைத்தளத்தில் மகன் மற்றும் மகளுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ள நிலையில் நடிகை சரண்யா மோகனுக்கு இவ்வளவு பெரிய மகன் மகளா? என ரசிகர்கள் ஆச்சரியமாக கமெண்ட்ஸ்களை பதிவு செய்துவருகின்றனர்.

’காதலுக்கு மரியாதை’ என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சரண்யா மோகன், தனுஷ் நடித்த ’யாரடி நீ மோகினி’ வினய் நடித்த ’ஜெயம்கொண்டான்’ உள்பட பல திரைப்படங்களில் நடித்தார் என்பதும் குறிப்பாக விஜய் நடித்த ’வேலாயுதம்’ திரைப்படத்தில் அவருக்கு தங்கை கேரக்டரில் நடித்து அனைவரையும் கவர்ந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை சரண்யா மோகன் தனது நீண்டநாள் காதலரான டாக்டர் அரவிந்த் கிருஷ்ணன் என்பவரை கடந்த 2015ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு அனந்த பத்மநாபன் என்ற மகனும் அன்னபூர்ணா என்ற மகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமூகவலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் சரண்யாமோகன் சமீபத்தில் தனது மகன் மகளுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ள நிலையில் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சரண்யா மோகனுக்கு இவ்வளவு பெரிய மகன், மகளா? என ஆச்சரியம் அடைந்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.