close
Choose your channels

லாக்டவுனுக்கு பின் காதலரை கைப்பிடிக்கின்றாரா வரலட்சுமி?

Tuesday, May 19, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான வரலட்சுமியின் திருமணம் குறித்து அவ்வப்போது வதந்திகள் வெளி வந்து கொண்டே இருக்கும். கடந்த சில ஆண்டுகளாக விஷாலை அவர் திருமணம் செய்யப் போவதாக வதந்திகள் வெளியானது என்பதும், ஆனால் விஷாலுக்கு சமீபத்தில் அனிஷா ரெட்டி என்பவருடன் நிச்சயதார்த்தம் ஆனதை அடுத்து இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் தற்போது நடிகை வரலட்சுமி, சந்தீப் என்ற தொழிலதிபரை காதலித்து வருவதாகவும் விரைவில் இருவருக்கும் திருமணம் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. இந்திய கிரிக்கெட் அணியின் நிர்வாகிகளில் ஒருவரான சந்தீப், தல தோனி மற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி ஆகியோர்களுக்கு மிகவும் நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சரத்குமார் மற்றும் சந்தீப்பின் பெற்றோர்கள் நீண்ட கால நண்பர்கள் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் வரலட்சுமி மற்றும் சந்தீப் இடையே திடீரென காதல் மலர்ந்ததாகவும்,  இதனை அடுத்து சரத்குமார் மற்றும் சந்தீப் பெற்றோர் சமீபத்தில் சந்தித்து இந்த திருமணம் குறித்து பேசியதாகவும் ஊரடங்கு உத்தரவு முடிந்த பின்னர் இந்த திருமணம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது 

ஏற்கனவே வரலட்சுமியின் சகோதரி ரெயானாவும், பிரபல கிரிக்கெட் வீரர் அபினவ் முகுந்த் என்பவரை திருமணம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் வரலட்சுமி தரப்பில் இருந்து இதற்கு விளக்கமளித்தபோது, வரலட்சுமி தற்போது சினிமாவில் முழு கவனம் செலுத்தி வருவதாகவும், இப்போதைக்கு அவர் திருமணம் செய்யும் எண்ணம் இல்லை என்றும் கூறினர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.