close
Choose your channels

35 ஆண்டுகளுக்கு பின் மீண்டும்.. நெகிழ்ச்சியான சம்பவத்தை கூறிய நடிகை குஷ்பு!

Friday, February 16, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை குஷ்பு கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்னர் பாலிவுட் திரைப்படத்தில் நடித்த நிலையில் மீண்டும் பாலிவுட் திரைப்படம் ஒன்றில் நடிக்க ஒப்புக் கொண்டதாக நெகிழ்ச்சியாக குறிப்பிட்டுள்ளார்.

நடிகை குஷ்பூ குழந்தை நட்சத்திரமாக ஒரு சில பாலிவுட் படங்களில் நடித்த நிலையில் அதன் பின் தமிழ் உட்பட தென்னிந்திய படங்களில் பிரபல நாயகியாக மாறினார். இருப்பினும் அவ்வப்போது ஒரு சில பாலிவுட் படங்களில் நடித்து வந்த நிலையில் கடந்த 1992 ஆம் ஆண்டு வெளியான 'பிரேம பதான்' என்ற ஹிந்தி படத்திற்கு நடித்த பிறகு வேறு எந்த பாலிவுட் படத்தில் அவர் நடிக்கவில்லை.

'பிரேம பதான்' படத்தின் படப்பிடிப்பு கடந்த 1989 ஆம் ஆண்டிலேயே முடிந்த நிலையில் தற்போது இரு 35 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும 'ஜர்னி' என்ற ஹிந்தி படத்தில் அவர் நடிக்க உள்ளார். பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் குஷ்பு இணைந்து உள்ளதை அடுத்து அவர் நெகிழ்ச்சி உடன் குறிப்பிட்டுள்ளார்.

அனில் சர்மா இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் 35 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் பாலிவுட்டில் நடிப்பது தனக்கு முற்றிலும் புத்துணர்ச்சி கிடைத்துள்ளதாகவும் குறிப்பாக நானா படேகர் உடன் நடிப்பது தனக்கு உற்சாகமளிக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.