close
Choose your channels

95 நாட்களுக்கு பின் நடந்த அதிசயம்: யாஷிகாவின் வைரல் வீடியோ!

Friday, October 29, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகையும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான யாஷிகா ஆனந்த் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார் என்பதும் இந்த விபத்தில் அவருடைய நெருங்கிய தோழி ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இடுப்பு எலும்புக்ள், கால் எலும்புகள் என பல எலும்பு முறிவுக்கு சிகிச்சை பெற்று வந்த யாஷிகா ஆனந்த், 95 நாட்களுக்கு பின்னர் தற்போது நடக்க முயற்சிக்கும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். 95 நாட்களுக்கு பின்னர் குழந்தை போல நடக்க தொடங்கி உள்ளேன் என்றும் எனது நம்பிக்கை மற்றும் அனைவரது பிரார்த்தனை காரணமாக தற்போது நடக்க ஆரம்பித்து உள்ளேன் என்றும் எந்தவித ஆதாரமும் இல்லாமல் மீண்டும் என் காலில் வலிமை பெறுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றும் கூறிய யாஷிகா ஆனந்த் தன்னை நன்றாக கவனித்துக் கொண்ட டாக்டர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் கூறியுள்ளார்.

மேலும் யாஷிகா ஆனந்த் அந்த வீடியோவில் மருத்துவர்களின் உதவியுடன் ஒரு சில அடிகள் நடப்பது குறித்த காட்சிகளும் அதில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து யாஷிகா ஆனந்த் விரைவில் பூரண நலம் பெற வேண்டுமென்றும், மீண்டும் அவர் பழையபடி வலுப்பெற வேண்டும் என்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.