close
Choose your channels

'படையப்பா'வுக்கு பின்னர் மீண்டும் ரஜினியுடன் இணையும் பிரபலம்!

Monday, April 25, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’படையப்பா’ திரைப்படத்தில் நீலாம்பரி என்ற முக்கிய கேரக்டரில் ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்தார் என்பது அந்த படம் அவருக்கு மிகப் பெரிய புகழை பெற்றுத் தந்தது என்பது தெரிந்ததே. அதன்பிறகு அவருக்கு அமைந்த அழுத்தமான கேரக்டர் என்றால் ’பாகுபலி’ சிவகாமி கேரக்டர்தான் என்பது அனைவரும் அறிந்ததே

இந்நிலையில் ரஜினியின் அடுத்த படத்தில் ரம்யாகிருஷ்ணன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகயிருக்கும் ’தலைவர் 169’ திரைப்படத்தில் ரம்யா கிருஷ்ணன் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும், அந்த கேரக்டர் அனேகமாக ’படையப்பா’ நீலாம்பரி கேரக்டர் போல் நெகட்டிவ் கேரக்டர் ஆக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது

ஏற்கனவே இந்த படத்தில் ஐஸ்வர்யா ராய் நாயகியாக நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது ரம்யா கிருஷ்ணனும் இணையவிருப்பதாக கூறப்படுவதால் படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூலை மாதம் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.