close
Choose your channels

ரஜினியை அடுத்து விஜய்: இளம் இயக்குனர் காட்டில் மழை!

Tuesday, August 17, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஒரே ஒரு படம் மட்டுமே இயக்கிய இளம் இயக்குனர் ஒருவருக்கு ரஜினிகாந்த் மற்றும் விஜய் ஆகிய இருவரது படங்களையும் அடுத்தடுத்து இயக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் கோலிவுட்டில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

துல்கர் சல்மான், ரக்சன், ரிதுவர்மா, நிரஞ்சனி, கவுதம் மேனன் உள்பட பலர் நடித்த ’கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ என்ற திரைப்படத்தை இயக்கியவர் தேசிங்கு பெரியசாமி. இவர் அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார் என்றும் இது குறித்த ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கி விட்டதாகவும் இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் தளபதி விஜய்யை சந்தித்த இயக்குனர் தேசிங்கு பெரியசாமி ஒரு கதை கூறியதாகவும் அந்த கதை அசத்தலாக இருந்ததால் விஜய்க்கு பிடித்து விட்டதாகவும் ரஜினிகாந்த் படத்தை முடித்துவிட்டு வாருங்கள், உடனடியாக இந்த படத்தை தொடங்குவோம் என விஜய் ஒப்புதல் கொடுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

’பீஸ்ட்’ படத்தை அடுத்து விஜய் நடிக்கவிருக்கும் தமிழ் தெலுங்கு திரைப்படத்தை தில்ராஜூ தயாரிக்க உள்ளார் என்பதும், இயக்குனர் வம்சி இயக்க உள்ளார் என்பதும் தெரிந்ததே. இந்த படத்தை விஜய் முடித்தவுடன் அவர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிப்பார் என்று கூறப்படுகிறது. ஒரே ஒரு வெற்றி படம் இயக்கிய இயக்குனர் தேசிங்கு பெரியசாமி அடுத்தடுத்து ரஜினி, விஜய் படங்களை இயக்க வாய்ப்பு கிடைத்திருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.