close
Choose your channels

சூர்யா, கார்த்தியை அடுத்து வெள்ள பாதிப்புக்கு நிதியுதவி செய்த இளம் ஹீரோ..!

Thursday, December 7, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னையில் ஏற்பட்ட கனமழை மற்றும் பெரு வெள்ளம் காரணமாக ஏராளமான மக்கள் அடிப்படை தேவை கிடைக்காமல் தத்தளித்து வரும் நிலையில் நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி ஆகிய இருவரும் சென்னை வெள்ள நிவாரண நிதிக்கு 10 லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கினார்கள் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இளம் நடிகர் ஹரிஷ் கல்யாண் தனது பங்காக ஒரு லட்ச ரூபாய் நன்கொடை வழங்கி உள்ளார்

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை சின்னாபின்னமானது என்பதும், சென்னையின் பல பகுதிகளில் இன்னும் வெள்ள நீர் வடியாமல் அடிப்படை தேவை கிடைக்காமல் பொதுமக்கள் கஷ்டப்பட்டு வருகின்றனர்

இந்த நிலையில் நடிகர்கள் சூர்யா, கார்த்தி பத்து லட்ச ரூபாய் முதலமைச்சர் வெள்ள நிவாரண நிதி வழங்கிய நிலையில், இளம் நடிகர் ஹரிஷ் கல்யாண் ஒரு லட்ச ரூபாய் வழங்கியுள்ளார். சமீபத்தில் அவர் நடித்த ’பார்க்கிங்’ திரைப்படம் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் அவர் தன்னால் முடிந்த ஒரு லட்ச ரூபாய் நிதி வழங்கி உள்ளதாக அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

முன்னணி நடிகர்களே மக்களுக்கு உதவ முன்வராத நிலையில் ஹரிஷ் கல்யாண் போன்ற இளம் நடிகர் உதவி செய்திருப்பதை அடுத்து அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.