close
Choose your channels

அமிதாப் குடும்பத்தின் இருவர் டிஸ்சார்ஜ்: ரசிகர்கள் வாழ்த்து

Monday, July 27, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் மற்றும் அவருடைய மகன் அபிஷேக் பச்சன் ஆகிய இருவரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். அதன் பின் ஒரு சில நாட்கள் கழித்து ஐஸ்வர்யாராய் மற்றும் ஆராத்யா ஆகிய இருவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதாகவும் அவர்கள் இருவரும் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர்களும் ஓரிரு நாட்களுக்கு பின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்

மும்பை நானாவதி மருத்துவமனையில் அமிதாப், அபிஷேக், ஐஸ்வர்யா ராய், ஆராத்யா ஆகிய நால்வரும் தொடர்ந்து மருத்துவரின் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது ஐஸ்வர்யா ராய் மற்றும் ஆராத்யா ஆகிய இருவர் மட்டும் கொரனோ பாதிப்பிலிருந்து முழுமையாக குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்

தற்போது அமிதாப்பச்சன் மற்றும் அபிஷேக் பச்சன் ஆகிய இருவர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் விரைவில் அவர்களும் குணமடைந்து வீடு திரும்புவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஐஸ்வர்யா ராய் மற்றும் ஆராத்யா ஆகிய இருவரும் கொரோனா பாதிப்பிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பியதற்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.