close
Choose your channels

சாகவும் துணிந்த ரசிகரிடம் சத்தியம் வாங்கிய ஐஸ்வர்யா ராஜேஷ்

Friday, June 12, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஐஸ்வர்யா ராஜேஷூக்காக சாகவும் தயார் என கூறிய ரசிகரிடம் சத்தியம் வாங்கிய ஐஸ்வர்யா ராஜேஷால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் நல்ல கேரக்டர்களை தேர்வு செய்து, நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டரில் நடித்து வரும் நடிகைகளில் ஒருவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவரது நடிப்பில் உருவாகியுள்ள க/பெ ரணசிங்கம்’ என்ற திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பதும் இந்த படத்திற்காக இவருக்கு தேசிய விருது கிடைக்கும் வாய்ப்பு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஐஸ்வர்யா ராய் சமீபத்தில் தனது அட்டகாசமான புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்தார். இந்த புகைப்படத்திற்கு கமெண்ட் அளித்த ஒரு ரசிகர், ‘உங்களுக்காக நான் சாகத் தயார்’ என்று கூறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுகுறித்து ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியபோது, ‘உங்கள் அன்புக்கு மிக்க நன்றி. ஆனால் தயவுசெய்து இதுபோன்ற வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம். வாழ்க்கை என்பது சாவதற்கு இல்லை. நான் என்றும் உங்கள் நண்பகாக இருப்பேன். எனவே இதுபோன்ற வார்த்தைகளை மீண்டும் சொல்ல மாட்டேன் என்று எனக்கு சத்தியம் செய்யுங்கள்’ என்று பதிலளித்துள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷின் இந்த பதில் தற்போது சமூக வளங்களை வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.