close
Choose your channels

செல்பி எடுத்த நபரின் போனை பிடுங்கிய அஜித்: வைரல் வீடியோ

Tuesday, April 6, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் தல அஜீத் தனது மனைவி ஷாலினியுடன் 6.30 மணிக்கே திருவான்மியூர் வாக்குப்பதிவு மையத்திற்கு வந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய உடன் தனது வாக்கை பதிவு செய்ய முயன்றபோது ரசிகர்கள் முண்டியடித்து கொண்டு அவருடன் செல்பி எடுக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

திருவான்மியூர் வாக்குச்சாவடியில் பாதுகாப்புக்கு இருந்த காவல்துறை அதிகாரிகள் மற்றும் தேர்தல் அதிகாரிகள், ரசிகர்கள் மற்றும் பொதுமக்களை கலைந்து செல்லும்படி கூறியும் தொடர்ந்து ரசிகர்கள் வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுத்துக் கொண்டிருந்ததால் சில நிமிடங்கள் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் ஒரு கட்டத்தில் அஜித் கோபமாகி செல்பி எடுத்த ரசிகர் ஒருவரின் செல்போனை பிடுங்கி வைத்துக் கொண்ட காட்சியின் வீடியோ வைரலாகி வருகிறது. அஜித் தனது ஜனநாயக கடமையை ஆற்ற வந்திருக்கும் நிலையிலும் அவரது ரசிகர்கள் அவருடன் செல்பி எடுக்க முயன்றதால் அந்த வாக்குச்சாவடியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனை அடுத்து அஜித் தனது வாக்கை பதிவு செய்யும் போதும் வாக்களித்த பின்னரும் அவருக்கு தகுந்த பாதுகாப்பு அளித்த காவல்துறையினர் அவர் வாக்களித்த பின்னர் பாதுகாப்புடன் அனுப்பி வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.