close
Choose your channels

ரஜினி பட நடிகருக்கு மாவோயிஸ்ட்கள் அமைப்பு எச்சரிக்கை

Monday, May 29, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் லைகாவின் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் படம் '2.0'. இந்த படத்தில் ரஜினிக்கு வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் அக்சயகுமார் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் சத்தீஸ்கர் மாநிலத்தில் வீரமரணமடைந்த 12 சி.ஆர்.பி.எஃப் வீரர்களின் குடும்பங்களுக்கு அக்‌ஷய் குமார் ஒரு கோடி ரூபாய் நிதியுதவி வழங்கினார். அக்சயகுமாரின் இந்த உதவியை பலர் சமூகவலைத்தளங்களில் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் மாவோயிஸ்ட்டு அமைப்பினர் சில துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்துள்ளனர். அதில், ஒடுக்கப்பட்ட பழங்குடியின மக்களுக்கு ஆதரவாகத்தான் திரையுலக பிரபலங்களும், தனி நபர்களும் குரல் கொடுக்க வேண்டும் என்றும் மாறாக ஜவான்களின் பக்கம் நிற்கக்கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அதே துண்டு பிரசுரத்தில் சி.ஆர்.பி.எஃப் வீரர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி செய்த பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நெய்வால் அவர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனையடித்து அக்சயகுமாருக்கும், சாய்னா நெய்வால் அவர்களுக்கும் பாதுகாப்பை அதிகரிக்க போலீசார் முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.