close
Choose your channels

அமிதாப்பச்சனுக்கு திரையுலகின் மிகப்பெரிய விருது! மத்திய அமைச்சர் அறிவிப்பு

Tuesday, September 24, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

திரைப்படத்துறையின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதுக்கு பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டிருப்பதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அவர்கள் அறிவித்துள்ளார். அமிதாப்பச்சன் அவர்கள் திரைப்படத்துறையில் செய்த சாதனைகளுக்காக இந்த விருது வழங்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

திரைப்படத்துறையில் சாதனைகள் புரிந்த ஜாம்பவான்களுக்கு உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். இந்த விருதை ஏற்கனவே சிவாஜி கணேசன், ராஜ்குமார், திலீப்குமார், கே.பாலசந்தர், ஆஷா போன்ஸ்லே, தேவ் ஆனந்த், அடூர் கோபாலகிருஷ்ணன், சசிகபூர், கே.விஸ்வநாத், வினோத்கண்ணா போன்ற பல திரையுலக ஜாம்பவான்கள் பெற்றுள்ளனர். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான தாதா சாகேப் விருது பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் அவர்களுக்கு வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் அமிதாப் பச்சன் ஏற்கனவே பத்ம பூஷன், பத்ம விபூஷன், பத்ம ஸ்ரீ விருதுகளை பெற்றுள்ள நிலையில் தற்போது தாதா சாகேப் பால்கே விருதினையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. திரைத்துறையின் உயரிய விருதை பெறும் அமிதாப் அவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.