close
Choose your channels

செம லவ் ஸ்டோரி: 'அன்பிற்கினியாள்' கீர்த்தி பாண்டியனின் அடுத்த படம்!

Thursday, April 21, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் மற்றும் தயாரிப்பாளர் அருண்பாண்டியனின் மகளும் ’அன்பிற்கினியாள்’ என்ற திரைப்படத்தின் நாயகியுமான கீர்த்தி பாண்டியன் நடிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த படத்தின் டைட்டில் போஸ்டரை பிரபல இயக்குனர்கள் வெங்கட் பிரபு மற்றும் பிஎஸ் மித்ரன் தங்கள் சமூக வலை தளங்களில் வெளியிட்டுள்ளனர். ’கொஞ்சம் பேசினால் என்ன’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் நாயகனாக வினோத் கிஷானும், நாயகியாக கீர்த்தி பாண்டியனும் நடிக்க உள்ளனர். மேலும் இந்த படத்தில் யூடியூப் பிரபலங்களான ஆஷிக் மற்றும் செபாஸ்டின் ஆகியோரும் நடிக்கவுள்ளனர்.

ஹரி தஃபூசியா என்பவர் இசையமைக்கும் இந்த படத்தை கிரி முர்ஃபி இயக்கயுள்ளார். இந்த படத்தின் கதை, பள்ளிக்கால தோழர்கள் இருவர் நீண்ட இடைவெளிக்கு பின்னர் சந்திக்கும் போது ஏற்படும் காதல் என்று கூறப்படுகிறது. இதுவரை வெளியாக வித்தியாசமான செம லவ் ஸ்டோரி ஆக இந்த படம் இருக்கும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விட்டதாகவும், இந்த படத்தை சூப்பர் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.