close
Choose your channels

நாடோடிகள் 2: அஞ்சலியுடன் இணையும் பிரபல நாயகி

Tuesday, January 16, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நீண்ட இடைவெளிக்கு சசிகுமார்-சமுத்திரக்கனி இணையும் 'நாடோடிகள் 2' படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கிவிட்டதாக ஏற்கனவே வெளிவந்த செய்தியினை பார்த்தோம். இந்த படத்தின் நாயகியாக அஞ்சலி நடிக்கவுள்ளார் என்ற தகவல் நேற்று வெளியானது.

இந்த நிலையில் இந்த படத்தில் இன்னொரு நாயகியாக அதுல்யாவும் ஒப்பந்தமாகியுள்ள செய்தி சற்றுமுன் வெளிவந்துள்ளது. இவர் ஏற்கனவே சமுத்திரக்கனியின் 'ஏமாலி' என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த படம் நாடோடிகள்' படத்தின் கதையின் தொடர்ச்சி இல்லை என்றும், இருப்பினும் நாடோடிகள் கதையின் பாணியில் இந்த கதையும் இருக்கும் என்பதால் நாடோடிகள் 2' என டைட்டில் வைக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

வரும் மார்ச் மாதம் படப்பிடிப்பு தொடங்கவுள்ள இந்த படத்தில் பிக்பாஸ் பிரபலங்களான பரணி மற்றும் கஞ்சாகருப்பு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.