close
Choose your channels

ஒரே பாடலில் இணைந்த ஏ.ஆர்.ரஹ்மான்-ஜிவி பிரகாஷ்-அனிருத்

Sunday, December 9, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இசைப்படமான 'சர்வம் தாளமயம்' திரைப்படம் இம்மாத இறுதியில் வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் முழுவீச்சில் நடந்து வருகிறது.

இந்த படத்தில் இடம்பெற்ற இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி இசை ரசிகர்களின் வரவேற்பை பெற்ற நிலையில் நாளை அதாவது டிசம்பர் 10ஆம் தேதி மாலை 6 மணிக்கு 'பீட்டர் பீட்டு எது' என்ற 3வது சிங்கிள் பாடல் வெளியாகவுள்ளது.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான இந்த பாடலை ஜிவி பிரகாஷ் பாடியுள்ளார். மேலும் இந்த பாடலை இசையமைப்பாளர் அனிருத் நாளை வெளியிடவுள்ளார். ஒரே பாடலில் ரஹ்மான், ஜிவி பிரகாஷ், அனிருத் இணைந்துள்ளது ஒரு ஆச்சரியமான விஷயமாக பார்க்கப்படுகிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.