close
Choose your channels

'ஜல்லிக்கட்டு' சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆர்யா

Saturday, December 24, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை நடத்த சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளதால் இந்த வருடமாவது ஜல்லிக்கட்டு நடத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ் அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. பொங்கல் திருநாள் நெருங்குவதால் இந்த விவகாரம் தமிழர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் தனது ரசிகர்களிடம் சமூக வலைத்தளத்தில் உரையாடிய நடிகர் ஆர்யா, ஜல்லிக்கட்டு குறித்து ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு சர்ச்சைக்குரிய பதில் ஒன்றை கூறினார். இந்த பதிலால் அதிர்ச்சி அடைந்த சமூக வலைத்தள பயனாளிகள் ஆர்யாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில் இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக என்னுடைய டுவீட் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. 'நான் ஜல்லிக்கட்டை முழுமையாக ஆதரிக்கின்றேன் என்று கூறி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.