close
Choose your channels

வேற பெண்ணே கிடைக்கலையா? கேலி செய்த நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுத்த அசோக் செல்வன்..!

Sunday, September 17, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் அசோக் செல்வன், நடிகை கீர்த்தி பாண்டியனை சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட நிலையில் திருமண புகைப்படங்களை பார்த்து ஒரு சில நெட்டிசன்கள் கேலியும் கிண்டலும் செய்து ’அசோக் செல்வனுக்கு வேறு பெண்ணே கிடைக்கவில்லையா என கமெண்ட் செய்தனர். இந்த கிண்டலுக்கு ஒரே ஒரு பதிவின் மூலம் அசோக் செல்வன் பதிலடி கொடுத்துள்ளார்.

நடிகர் அசோக் செல்வன் மற்றும் நடிகை கீர்த்தி பாண்டியன் திருமணம் சமீபத்தில் திருநெல்வேலியில் நடைபெற்றது என்பதும், இந்த திருமணத்தில் அருண்பாண்டியன், ரம்யா பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர் என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் அசோக் செல்வனின் திருமண புகைப்படத்தை பார்த்த சிலர் அசோக் செல்வன் போன்ற அழகான பையனுக்கு இப்படி ஒரு மனைவியா? இதைவிட பெட்டரான பெண்ணை தேர்வு செய்திருக்கலாம் என்று கமெண்ட்ஸ்கள் பதிவு செய்தனர். குறிப்பாக இந்த பதிவுகள் பெண் ஐடியில் இருந்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் மனைவி கீர்த்தி பாண்டியனுடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள அசோக் செல்வன் ’இந்த உலகிலேயே மிக அழகான பெண்ணுடன் நான்’ என்று பதிவு செய்துள்ளார். இந்த பதிவு தன்னுடைய மனைவியை கேலி செய்தவர்களுக்கான சரியான பதிலடி என்று அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.