close
Choose your channels

அசோக்செல்வன் - கீர்த்தி பாண்டியன் திருமண அழைப்பிதழ்.. முகூர்த்த தேதி, நேரம் குறித்த தகவல்..!

Monday, August 21, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் அசோக் செல்வன் மற்றும் நடிகை கீர்த்தி பாண்டியன் திருமணம் குறித்த தகவலை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த திருமணத்தின் அழைப்பிதழ் தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. அதில் முகூர்த்த தேதி மற்றும் நேரமும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரபல நடிகர் மற்றும் தயாரிப்பாளர் அருண்பாண்டியன் மகள் கீர்த்தி பாண்டியனை நடிகர் அசோக் செல்வன் திருமணம் செய்யப் போவதாக வெளியான தகவலை பார்த்தோம். இந்த நிலையில் இந்த திருமணம் செப்டம்பர் 13ஆம் தேதி காலை 6 மணி முதல் ஏழு மணி வரை நடைபெற இருப்பதாகவும் பசுமை விருந்து காலை 8 முதல் நடைபெறும் என்றும் அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் திருமணம் திருநெல்வேலி சேது அம்மாள் பண்ணையில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இரு குடும்பத்தாரின் பெயர்களுடன் வெளியாகி உள்ள இந்த திருமண அழைப்பிதழ் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இதனை அடுத்து ரசிகர்கள் வருங்கால தம்பதிகளான அசோக்செல்வன், கீர்த்தி பாண்டியனுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.