close
Choose your channels

விசித்ராவுக்கு மட்டும் அடுத்தடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்த பிக்பாஸ்.. ஆனந்தக்கண்ணீர் மழை..!

Friday, December 22, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக் பாஸ் நிகழ்ச்சி 80 நாட்களை தாண்டி வெற்றிகரமாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த வாரம் முழுவதும் உறவினர்கள் வருகை தரும் வாரம் என்பதால் செண்டிமெண்டாக இருந்தது. ஒரு சில குழப்பங்கள் இருந்தாலும் இந்த வாரம் போட்டியாளர்கள் ஜாலியாகவே இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கிட்டத்தட்ட அனைத்து போட்டியாளர்களின் உறவினரும் வந்துவிட்டனர் என்பதும் சில போட்டியாளர்களின் உறவினர்கள் இரு முறை வந்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் விசித்ராவின் உறவினர்கள் மட்டும் வராமல் இருந்தது அவருக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது.

இந்த நிலையில் இன்று திடீரென பிக் பாஸ் விசித்ராவை தவிர எல்லாரும் ப்ரீஸில் இருந்து வெளியே வரலாம் என்று அறிவித்தார். இதனை அடுத்து விசித்ரா மட்டும் பிரீசல் இருக்க அனைத்து போட்டியாளர்களும் வாசலை நோக்கி செல்ல விசித்ராவின் கணவர் வந்தார். இதனை அடுத்து விசித்ரா தனது கணவரை கட்டிப்பிடித்து ஆனந்தக்கண்ணீர் வடித்த போது திடீரென பிக்பாஸ் கன்ஃபக்சன் அறைக்கு அழைத்தார்.

விசித்ரா அதிருப்தியுடன் கன்ஃபக்சன் அறைக்கு சென்று டாஸ்க் குறித்த ஃபைலை வாங்கி போட்டியாளர்கள் முன் படிக்க முயற்சித்தபோது ஆச்சரியம் அடைந்தார். ஏனெனில் போட்டியாளர்கள் வரிசையில் அவருடைய மூன்று மகன்களும் உட்கார்ந்தனர். விசித்ராவுக்கு அடுத்தடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்த இந்த காட்சி பார்வையாளர்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.