close
Choose your channels

பிக்பாஸ் போட்டியாளர்களை வைத்து புதிய நிகழ்ச்சி: ரம்யாவுக்கு மட்டும் ஏன் இந்த பொறுப்பு?

Wednesday, April 28, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ் என்பதும் கடந்த 4 சீசன்களாக இந்த நிகழ்ச்சி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் தெரிந்ததே. மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் பிரபலமாகி திரையுலகிலும் வாய்ப்புகளைப் பெற்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் பிக்பாஸ் சீசன் 3 டைட்டில் வின்னர் முகின் நடிக்கும் படத்தின் டைட்டில் போஸ்டர் வெளிவந்தது என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் சீசன் 1 முதல் சீசன் 4 வரை கலந்து கொண்ட போட்டியாளர்களில் சிலரை தேர்வு செய்து ’பிக்பாஸ் ஜோடி’ என்ற நிகழ்ச்சியை நடத்த விஜய் டிவி திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே ’ஜோடி’ என்ற நிகழ்ச்சியின் பாணியிலேயே இந்த பிக்பாஸ் ஜோடி நிகழ்ச்சியும் இருக்கும் என்று தெரிகிறது.

இதுவரை இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சோம்சேகர், கேபி, ஜூலி, சென்றாயன், ஷிவானி, வனிதா, சாண்டி உள்பட ஒருசிலர் உறுதி செய்யப்பட்டுள்ளனர். இந்த நிகழ்ச்சியின் புரோமோ சமீபத்தில் வெளியாகியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் நடுவர்கள் யார்? என்ற கேள்விகள் எழுந்த நிலையில் நடிகை ரம்யா பாண்டியனை நடுவராக ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. அவரோடு நடிகர் ஜீவாவும் நடுவராக இருப்பார் என்று தெரிகிறது. ரம்யா பாண்டியன் போட்டியாளர்களில் ஒருவராக இருந்தால் நிகழ்ச்சி களைகட்டும் என்றும் ஆனால் அவரை நடுவராக உட்கார வைத்து விட்டார்களே என்றும் ரசிகர்கள் ஆதங்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிகழ்ச்சி மே 2 முதல் ஒவ்வொரு ஞாயிறு அன்றும் ஒளிபரப்பாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.