close
Choose your channels

பிக்பாஸ் மீராமிதுனுக்கு கொலை மிரட்டல்: போலீஸில் புகார்

Saturday, June 29, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3வது பாகம் கடந்த ஞாயிறு தொடங்கிய நிலையில் இரண்டு நாட்கள் கழித்து அதாவது கடந்த செவ்வாய் அன்று 16வது போட்டியாளராக நடிகை மீராமிதுன் பிக்பாஸ் வீட்டில் இணைந்தார். ஆனால் அவரை பார்த்ததுமே அவர் மீது அபிராமி, சாக்சி உள்பட ஒருசிலர் வெறுப்பை காட்ட தொடங்கினர். அன்று முதல் இன்று வரை மீராமிதுனை தினமும் ஒருமுறை அழ வைத்து கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் 2016ஆம் ஆண்டு தென்னிந்திய அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மீராமிதுன் பின்னர் அந்த பட்டத்தை தவறாக பயன்படுத்தியதாக வந்த குற்றச்சாட்டால் பட்டத்தை இழந்தார். மேலும் சமீபத்தில் சென்னையில் அழகிப் போட்டி நடத்துவதற்கு ஏற்பாடுகளை அவர் செய்து வந்த நிலையில் அதிலும் சில சர்ச்சைகள் ஏற்பட்டு அவர் மீது போலீஸ் புகாரும் செய்யப்பட்டது

இந்த நிலையில் மீராமிதுன் தாயார் சியாமளா சென்னை போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதில் கேரளாவைச் சேர்ந்த ஒருவர் தனது மகளுக்கு கொலை மிரட்டல் விடுத்து வருவதாகவும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் உள்ள தனது மகளை வெளியேற்றும் வகையிலும் அவரது புகழை கெடுக்கும் வகையில் அந்த நபர் தவறான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்பி வருவதாகவும், அந்த நபர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அந்த புகாரில் மீராமிதுன் தாயார் கோரிக்கை விடுத்துள்ளார்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.