close
Choose your channels

நள்ளிரவு திடீரென கணவர் மீது போலீஸ் புகார் கொடுத்த ரக்சிதா .. என்ன காரணம்?

Wednesday, June 21, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சின்னத்திரை நடிகையும், பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான ரக்சிதா திடீரென நள்ளிரவில் காவல் நிலையம் சென்று தனது கணவர் தினேஷ் மீது புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘பிரிவோம் சந்திப்போம்’ என்ற சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் ரக்சிதா. இவர் ’சரவணன் மீனாட்சி’ உட்பட பல சீரியல்கள் நடித்துள்ளார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட அவருக்கு ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். அவருக்கு ரசிகர்களால் சமூக வலைத்தில் ஆர்மி அமைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் நடிகை ரக்சிதா தனது கணவர் தினேஷிடம் இருந்து பிரிந்து வாழ்வதாக கூறப்பட்ட நிலையில் தனது கணவர் தினேஷ் தனக்கு செல்போனில் ஆபாச மெசேஜ் அனுப்புவதாகவும் தன்னை மிரட்டுவதாகவும் மாங்காடு காவல் நிலையத்தில் நள்ளிரவில் திடீரென புகார் அளித்துள்ளார். இந்த புகார் குறித்து காவல்துறையினர் தினேஷிடம் விசாரணை செய்ய உள்ளனர்.

ஏற்கனவே ரக்சிதாவின் நெருங்கிய தோழியும் அவருக்கு சீரியலில் டப்பிங் குரல் கொடுப்பவருமான ஐஜி என்பவர் தினேஷ் மீது புகார் அளித்துள்ள நிலையில் தற்போது ரக்சிதாவும் புகார் அளித்துள்ளார் என்பது குறிப்பிடப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.