close
Choose your channels

ரவீனா உறவினரை உடனடியாக வெளியேற்றிய பிக்பாஸ்.. இதுதான் முதல் முறை.. என்ன காரணம்?

Thursday, December 21, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் போட்டியாளர்களின் உறவினர்கள் வருகை தந்து கொண்டிருக்கின்றனர் என்பதை பார்த்தோம். இதுவரை வந்த உறவினர்கள் கலகலப்பாக போட்டியாளர்களிடம் பழகிய நிலையில் இன்று ரவீனாவின் அம்மா வருகை தந்தார்.

ரவீனாவின் அம்மா மணியுடன் உள்ள உறவு குறித்து ரவீனாவை கண்டித்தார் என்பதும் மணியையும் கூப்பிட்டு கண்டித்தார் என்பதையும் முதல் ப்ரோமோவில் இருந்ததை பார்த்தோம்.

இந்த நிலையில் ரவீனாவின் அம்மா சில கோட்வேர்டுகளை பயன்படுத்தி வெளியுலகத்தில் இருந்த தகவல்களை ரவீனாவுக்கு கூறினார். இதனை அடுத்து பிக் பாஸ் ’வெளி உலகத்தில் உள்ள விஷயங்களை பகிர்ந்து கொண்டதாலும், கோட்வேர்ட்ஸ்களை பயன்படுத்தியதாகவும் ரவீனாவின் அம்மா மற்றும் சகோதரர் இந்த பிக் பாஸ் வீட்டில் உங்கள் நேரம் இத்துடன் முடிந்து விட்டது’ என்று கூறுகிறார்.

இதையடுத்து இருவரும் வெளியேற தயாராகின்றனர். அப்போது ரவீனா ’ப்ளீஸ் பிக்பாஸ்’ என்று கூறிய நிலையில் ’நீங்கள் இரண்டு பேரும் உடனடியாக மெயின் டோர் வழியாக வெளியே வரவும்’ என்ற பிக் பாஸ் அறிவித்தார். இதனால் ரவீனா தனது அம்மாவை கட்டிப்பிடித்து அழுத காட்சிகளுடன் இன்றைய இரண்டாவது புரமோ முடிவுக்கு வருகிறது.

இதுவரையிலான பிக் பாஸ் சீசனில் வீட்டிற்கு வந்த விருந்தினரை வெளியேற பிக் பாஸ் அறிவித்துள்ளது இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.